குரு பகவான் என்றால் யார்.? குரு பகவான் பலன்கள் ! Guru Bhagavan Palangal in tamil.!
இவர்தான் வேதங்கள் படித்தவர், இவர்தான் எல்லோருக்கும் தேவகுருவாயிற்றே.கேட்க வேண்டுமா?
நாக்கில்தான்.எல்லா ஞானமும் இவருடையதாவே இருக்கும், காணப்படும். மனமோ சாத்வீகம் நிறைந்து தேவதைகளுக்கெல்லாம் குருவாக குரு அலங்கரிப்பவரான இவருக்குள்ள யோக்கியதை. மரியாதை இவைகளைப் பற்றி கேட்கவா வேண்டும்? கள்ளம், கபடம். ஒன்றுமே தெரியாதவர். பீடத்தை
நற்குணங்களும், சாத்வீகமூம் நிறைந்த தேவகுரு ஸ்தானத்தை அலங்கரிக்க எவ்வளவு மகோன்னதமான புண்ணியம் செய்திருக்க வேண்டும். சந்தேகமில்லாமல் இவர் புண்யசீலர். ஒழுக்கத்திற்கு இலக்கணமானவர்.
இவருடைய கிருபாகடாஷம் இருந்தால் எந்த நன்மையும் ஏற்படும். சுப காரியங்கள் எல்லாம் இவருடைய அருளால்தான் நடக்க வேண்டும். எவ்வளவுதான் வசதிகள் இருந்த போதிலும் ஆணும், பெண்ணும் தயாராக காத்திருந்த போதிலும் இவர்கள் கணவன் மனைவியாக வேண்டுமென்றால் கடைக்கண் பார்வையிருந்தால்தான் இவருடையநடக்கும். பல நன்மைகளுக்கும், மேன்மைக்கும், புகழுக்கும். கீர்த்திக்கும்.
வாழ்க்கை நிறைவுக்கும், பெருமைக்கும் குரு தேவர் அனுக்கிரகம் கட்டாயம் வேண்டும். குருபலம் ஒன்று இல்லாவிட்டால் வேறு எந்தபலம் இருந்தாலும் பயன்படாது.