ஒவ்வொருவரும் உழைக்கின்றார்கள் ஆனால் பணம் வீட்டில் தங்குவதில்லை என்று சொல்லக்கூடிய அத்தனை பேருக்கும் ஏற்ற பதிவு தான் இது. என்னதான் உழைத்தாலும் பணம் வீட்டில் சேருவதற்கென்றே சில விஷயங்களை நாம் செய்ய வேண்டும் அதில் முக்கியமான ஒரு சில விஷயங்களைப் பற்றி நாம் தெளிவாக பார்க்கலாம்.

என்னதான் கடவுளினுடைய ஆசிர்வாதம் நமக்கு இருந்தாலும் ஒரு சில விஷயங்களை நாம் கண்டிப்பாக பண விஷயத்தில் செய்ய வேண்டும்.
◆ உங்களுடைய பணப்பெட்டி அல்லது பீரோ குபேர மூலையில் இருக்கிறதா என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் அப்படி இல்லை என்றால் உங்கள் பணப்பெட்டி மற்றும் பீரோவை குபேர மூலையில் வைக்க வேண்டும்.
◆ உங்களுக்கு கிடைக்கக்கூடிய பணம் அல்லது மாதம்தோறும் உழைத்து உங்களுக்கு வரக்கூடிய சம்பள பணத்தை உங்கள் கைக்கு வந்த உடனே நீங்கள் செலவு செய்யக்கூடாது கடன் காரர்களுக்கு கொடுத்து விடக்கூடாது அதைக் கொண்டு வந்து பணம் வைக்கும் பெட்டியில் ஒரு நாள் வைக்க வேண்டும்.
அடுத்த நாள் அந்த பணத்தை எடுக்கும்போது மொத்த பணமும் எடுக்காமல் அதில் ஒரு நூறு ரூபாயாவது மிச்சம் வைத்துவிட்டு எடுக்க வேண்டும் அது நம் வீட்டுக்கு வந்த லட்சுமி நம்ம வீட்டிலேயே தங்குவதற்கு சமம்.
◆ செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் பணப்பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து மற்றவர்களுக்கு தானம் செய்யக்கூடாது ஏனென்றால் அன்று இரண்டு நாட்களும் நம் வீட்டில் லட்சுமி வாசம் கொள்ளக்கூடிய நாள் அன்று நம் பணம் வைக்கும் பெட்டியில் இருந்து ஒரு பொருள் எடுத்துக் கொடுக்கும் போது அந்த லட்சுமி அவர்களோடு போய் விடுவாள் என்பது ஒரு ஐதீகம்.
◆ வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை மற்றும் கடவுளுக்கு உகந்த சில நாட்களில் நீங்கள் பூஜைகள் வீட்டில் செய்யும் போது கண்டிப்பாக பணப்பெட்டி வைக்கும் அந்தப் பெட்டிக்கும் நீங்கள் ஊதுபத்தி அல்லது சாம்பிராணி காட்ட வேண்டும் ஏனென்றால் அங்கு லட்சுமி வாசம் கொண்டிருக்கின்றாள் அவளை மகிழ்விக்கும் போது அவள் நம்மை மகிழ்விப்பான்.
மேலே சொல்லப்பட்டுள்ள இந்த சின்ன சின்ன விஷயங்களை நீங்கள் பின்பற்றினாலே கண்டிப்பாக உங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் லட்சுமியினுடைய அருளும் உங்களுக்கு கிடைக்கும்.