கிம்ஸ்துக்கினம் காரணம் பலன்கள் / Kimathukkinan Karanam palan
கிம்ஸ்துக்கினம் கரணத்தில் பிறந்தவர்களின் உடைய குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

- கிம்ஸ்துக்கினம் கரணத்தில் பிறந்தவர்கள் புழு வணங்க வேண்டும் இந்த புழுக்கு நீங்கள் உரம் அளிப்பது உங்களுடைய வளர்ச்சிக்கு அது உறுதுணையாக இருக்கும் அதனால் நீங்கள் வழங்க வேண்டிய விலங்கு புழு
- நீங்கள் அதிக அளவு உங்களுடைய பெற்றோர்கள் மீது அன்பாகவும் பாசமாகவும் இருக்கக்கூடிய மனம் படைத்தவர்கள்.
- இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படுவதில் நீங்கள் புத்தி கூர்மையாக செயல்படக்கூடிய நபராகவே திகழ்பீர்கள்.
- ஆண் பெண் பாராமல் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடிய குணம் படைத்தவர்கள்.
- உங்கள் உடன் பிறந்தவர்களுடன் அதிக பாசம் உடையவர்களாக திகழ்வீர்கள்.
- உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சில நிகழ்வுகளில் சற்று சுய சுயநலத்தோடு செயல்படுவீர்கள்.
- சாஸ்திரம் சம்பிரதாயத்தில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பீர்கள்.
- வெளிநாடுகள் போக வேண்டும் வெளிநாட்டுகளில் இருக்கக்கூடிய பல இடங்களை சுற்றி பார்க்க வேண்டும் அல்லது உள்ளூரிலேயே தான் பிறந்த இடத்தை விட்டு வெளியிடங்களை சுற்றி பார்க்க வேண்டும் என்ற உலகம் சுற்றும் வாலிபராக அல்லது உலகம் சுற்றும் வாலிபையாக நீங்கள் திகழ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பீர்கள்.










