27 நட்சத்திரங்கள் அந்த நட்சத்திரங்களுக்கு உண்டான கோவில்களைப் பற்றி இன்று நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம் ஜாதகம் என்று எடுத்துக் கொண்டால் ஒருவருடைய ஜாதகத்தில் நட்சத்திரம் மிக மிக முக்கியம் அந்த நட்சத்திரத்தை பொறுத்தே அவர்களுடைய வாழ்க்கையின் அம்சங்கள் அமைந்திருக்கின்றன இதை நாம் மறுக்க முடியாது ஒவ்வொரு ஜோசியரும் உங்களுக்கு கஷ்டம் வந்தது என்று நீங்கள் ஜோசியரிடம் போகும்போது அவர்கள் சொல்லக்கூடிய விஷயம் உங்கள் நட்சத்திரத்தைப் பொறுத்து இந்த கோவிலை போய் வணங்குங்கள் நிச்சயமாக உங்களுக்கு நல்ல விதமான பலன்கள் அமையும் என்று சொல்வார்கள் நாமும் அதை நம்பி அவர்கள் சொல்லகூடிய கோவிலுக்கு சென்று நாம் பரிகாரமும் செய்து அதில் நம்முடைய திருப்தியை தேடிக் கொள்வோம் அந்த விதத்தில் இன்று இந்த பதிவில் ஜோசியரை பார்க்காமலேயே எந்த கோவிலுக்கு சென்றால் எந்த நட்சத்திரக்காரர்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்பதைப் பற்றி தெளிவாக உங்களுக்கு புகைப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது அதை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும் எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த கோவிலை வணங்க வேண்டும் என்று
27 நட்சத்திரம் என்பது 27 கடவுள்களை அடிப்படையாக கொண்டது. அந்த விதத்தில் அந்த நட்சத்திரத்துக்கு சம்பந்தமான கடவுளை வணங்கும் போது நிச்சயமாக அவர்களுடைய பரிபூரண ஆசிர்வாதம் நட்சத்திரகாரர்களுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்
திருமணம் தடை இருக்கக்கூடியவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழில் விருத்தி அடையாதவர்கள் நஷ்டம் ஏற்பட்டு தொழிலை மூட நினைப்பவர்கள், நிச்சயமாக நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு எந்த நட்சத்திரம் எந்த கடவுளை வணங்கினால் நமக்கு சுபிட்சம் பெறும் என்பதை தெரிந்துகொண்டு அந்த கடவுளை வணங்குவதும் மூலமாக நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இதனால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்கும், திருமணம் நடக்காத அவர்களுக்கு திருமணம் நடக்கும், தோஷங்கள் இருக்க கூடியவர்களுக்கு தோஷங்கள் நிச்சயமாக நல்ல தொழில் விருத்தி அடைந்து லாபம் பெறுவார்கள் அதனால் நிச்சயமாக அவர்களுடைய நட்சத்திரத்தை பொறுத்தே அவர்கள் அந்த கடவுளை வருடத்திற்கு ஒரு முறையாவது அவர்கள் பெயரை சொல்லி வணங்க வேண்டும்
சரி என்னால் அந்த நட்சத்திர கோவிலுக்கு செல்ல முடியவில்லை நான் என்ன செய்வது என்று கேட்கக் கூடியவர்கள் உங்கள் வீட்டில் இருந்து கொண்டே உங்கள் நட்சத்திர அதிபதியாக திகழக்கூடிய கடவுளை தினமும் காலை பூஜை அறையில் நின்று கொண்டு விளக்கு ஏற்றி உங்கள் மனதிற்குள் அந்த கடவுளின் பெயரைச் சொல்லி உதாரணத்திற்கு ஓம் நமசிவாயா போற்றி என்று சொல்லி வணங்க வேண்டும் இப்படி வணங்கும் போது நிச்சயமாக கடவுளின் உடைய முழு அருளும் உங்களுக்கு கிடைக்கும்
முடிந்தவரை உங்கள் நட்சத்திரத்திற்கு உகந்த கோவிலுக்கு சென்று கடவுளை பிரார்த்தனை செய்தால் நல்ல பலன்கள் உங்களுக்கு கிட்டும் எளிதில் உங்களுக்கு எல்லா விஷயங்களும் நல்லதாகவே அமையும்..