பஞ்ச தீபம் ஏற்றுதல் என்றால் என்ன.?
நினைத்த காரியம் நடக்க பஞ்ச தீபத்தை சிவன் கோவிலில் திங்கட்கிழமை மாலை நேரத்தில் காட்டினால் நாம் நினைத்த அத்தனை விஷயங்களும் கைகூடும் இந்த பஞ்ச தீபம் எப்படி ஏற்றுவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
பஞ்ச தீபம் ஏற்றுதல் என்றால் என்ன
இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்தையும் சம அளவு கலந்து தீபம் ஏற்றுவது பஞ்ச தீபம் என்று சொல்வார்கள். இந்த தீபத்தை சிவன் கோவிலில் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் பஞ்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்து கொண்டால் நினைத்தது நடக்கும்.