முருங்கை பிசின் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சாப்பிடும் முறை | Murungai Pisin Benifits in Tamil

முருங்கை மரத்தை எடுத்துக்கொண்டால் முருங்கைப்பூ, முருங்கையிலை, முருங்கக்காய், அதுமட்டுமல்லாமல் முருங்கை மரத்தில் இருந்து வரக்கூடிய அந்த கோந்து என்று சொல்லப்படுகின்ற முருங்கை பிசின், இது கூட நமக்கு உதவுகிறது. அதனால்தான் முருங்கை மரத்தை தொட்டவன் கொள் ஊன மாற்றான் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள். இதற்கு காரணம் முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய அத்தனை விஷயங்களையும் ஒருவன் சாப்பிடும் போது அவனுடைய உடலில் அத்தனை சக்திகளும் நிறைந்து வயதான காலத்தில் கோலை பிடித்து நடக்கும் விஷயம் அவன் வாழ்க்கையில் நடக்காது அதனால்தான் முருங்கையை தோற்றவன் கொள்வுன்றமாட்டான் என்று சொன்னார்கள்

சரி பொதுவாக முருங்கை என்று சொன்னாலே நமக்கு பாக்கியராஜ் படம் தான் ஞாபகத்திற்கு வரும் அந்த அளவுக்கு முருங்கை மரத்தினுடைய கதையை அந்தப்படத்தில் மூலதனமாக வைத்து எடுத்திருப்பார். ஆம் முருங்கை பிசின் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம் அதுமட்டுமல்லாமல் முருங்கை பிசினை நாம் எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளப் போகின்றோம்

முருங்கை பிசின் சாப்பிடும் முறை:

முருங்கைப் பிசினை உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய முருங்கை மரத்திலிருந்து எடுத்தாலும் சரி அல்லது உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய நாட்டு மருந்து கடையில் போய் முருங்கை பிசின் வாங்கிக் கொண்டு வந்தாலும் சரி. (முருங்கை பிசின் பவுடரை யாரும் வாங்க வேண்டாம் அது கலப்படம் முருங்கை பிசின் அந்த கோந்தை மட்டும் வாங்கிக்கொண்டு வரவேண்டும்) ஒரு 100 கிராம் வாங்கிக் கொண்டாலே ஒரு மாதத்திற்கு உங்களுக்கு வரும்

முருங்கை பிசின் ஒரு சிறு அளவு கட்டியை எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் அதை போட்டுவிடு வேண்டும் குறிப்பாக 12 மணி நேரம் அந்த தண்ணீரில் ஊற வேண்டும் அப்படி கூறினால் மட்டுமே மெதுவாக பஞ்சு போன்ற மென்மையை அது நமக்குத் தரும் அதை சாப்பிடும் போதும் நமக்கு நன்றாக இருக்கும்

தண்ணீரில் ஊறிய அந்த முருங்கை பிசினை எடுத்து ஒரு டம்ளர் பாலில் அதை போட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும் பிறகு ஒரு டீஸ்பூன் அளவிற்கு நாட்டுச் சர்க்கரையை அதில் போட்டு நன்கு கலக்க வேண்டும். நன்கு கலக்கிய முருங்கை பிசின், நாட்டுசக்கரை, பால், இந்த மூன்றையும் கலந்து பிறகு அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

இப்படி ஒரு மாதத்திற்கு தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உங்கள் உடல் புத்துணர்ச்சி பெறும் உங்கள் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

குறிப்பு

திருமணம் ஆனவர்கள் இந்த முருங்கை பிசினை சாப்பிடுவதால் சகல நன்மைகளும் அவர்களுக்கு கிடைக்கும்

முருங்கை பிசின் நன்மைகள்

1. திருமணமானவர்கள் இந்த முருங்கை பிசினை தினம்தோறும் அதிகாலையில் வெறும் வயிற்றில் உண்பதன் மூலமாக திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்

2. திருமணம் ஆன பின்பு குழந்தை இல்லாதவர்கள் தன் கணவன் அதிகாலையில் வெறும் வயிற்றில் இந்த முருங்கை பிசினை சாப்பிட்டு வருவதன் மூலமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்

3. முருங்கை பிசின் திருமணத்திற்குப் பிறகு சாப்பிடுவதன் மூலமாக இரவு தூங்கும் நேரம் அதிகரிக்கும்

4. 20 வயதிற்கு மேல் இதை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம் இதனால் உடல் குளிர்ச்சி அடையும் மூளை சுறுசுறுப்பாக இருக்கும் ரத்த ஓட்டம் அனைத்தும் சீராக இருக்கும்

5. திருமணம் ஆனவர்களே இதை அதிகமாக சாப்பிடுவார்கள் காரணம் குழந்தை பாக்கியம் பெறுவதற்கும் இல்லற வாழ்க்கை சுகமாக அமைவதற்கும் இதை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள்

6. ஒரு டம்ளர் பால், அதில் சிறிதளவு முருங்கை பிசின், ஒரு டீஸ்பூன் நாட்டுச்சக்கரை, இந்த மூன்றையும் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் சகல நன்மைகளும் கிடைக்கும்

நிச்சயமாக இதை சாப்பிடுவதன் மூலமாக உடல்களில் ரத்தஓட்டம் சீராக அமைந்து வயதான காலத்தில் கோல்களைப் பிடித்து நடக்கும் அளவிற்கு நம்மை இந்த முருங்கைமரம் விடாது என்பதை நம்புங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top