2025 வருடப் பிறப்பு அன்று நாம் எந்த கடவுளை வணங்கினால் நமக்கு சகல நன்மைகளும் கிடைக்கும்

புது வருடப் பிறப்பு நாம் எந்த கடவுளை வணங்கினால் நமக்கு சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகின்றோம். முதலில் உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த 2025 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்ல ஆண்டாக அமைய எல்லாம் வல்ல சிவனை உங்களோடு சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கின்றேன். நிச்சயமாக இந்த ஆண்டு உங்கள் அனைவருக்கும் நல்ல ஆண்டாக அமையப்போகிறது. அதற்கு கடவுளினுடைய அனுகிரகம் வேண்டும் அப்படி கடவுள் அனுகிரகம் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பற்றி தான் தெளிவாக பார்க்கப் போகின்றோம்.

1. முதலில் நீங்கள் வணங்க வேண்டிய கடவுள் உங்களுடைய குலதெய்வம். குலதெய்வ வழிபாடு கோடி வழிபாடு என்பார்கள் அதனால் முதலில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நீங்கள் உங்களுடைய குலதெய்வத்தை வணங்க வேண்டும் உங்கள் வீட்டுக்கு அருகாமையிலோ அல்லது உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய குலதெய்வத்திற்கு பூஜை செய்து இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் இறைவா என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

2. உங்களுடைய இஷ்ட தெய்வம் இரண்டாவதாக நீங்கள் வேண்ட வேண்டிய கடவுள். இஷ்ட தெய்வம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளை பிடிக்கும் அப்படி பிடித்த கடவுளை மனதார நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும் அப்படி செய்வதன் மூலமாக அவர்களுடைய முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும்.
3. மூன்றாவதாக உபாசனை தெய்வம், உங்களுடைய ஜாதகத்தின் அடிப்படையில் சில கடவுள் உங்களுக்காகவே காத்துக்கொண்டிருப்பார்கள் நல்லது செய்வதற்காக. அந்த கடவுள் உங்களுக்கு தெரிந்தால் அந்த கடவுளை நிச்சயமாக நீங்கள் வணங்க வேண்டும்.
4. குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் சிவபெருமானை வணங்க வேண்டும். சிவபெருமானை எப்படி வணங்குவது என்றால் அந்த காலத்தில் வாழ்ந்த நம்முடைய முன்னோர்கள் சிவன் கோத்திரம் அல்லது விஷ்ணு கோத்திரம் என்று சொல்வார்கள் ஒன்று சிவனை மயமாகக் கொண்டிருக்க வேண்டும் அல்லது பெருமாளை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். எனக்கு குலதெய்வம் தெரியாது என்று சொல்லக்கூடியவர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும் அல்லது பெருமாள் இந்த இரண்டு கடவுளையும் புத்தாண்டு அன்று நிச்சயமாக வணங்க வேண்டும்.
5. முடிந்தவரை உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று கடவுளை மனதார வேண்டி இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய எங்களுக்கு அருள் புரியுங்கள் என்று கேட்டுக்கொள்ள வேண்டும். அப்படி கேட்பதன் மூலமாக இறைவன் அருள் உங்களுக்கு கிடைத்து. இந்த ஆண்டு முழுவதும் நல்லவிதமான சௌகரியத்தை தந்து அருள் புரிவார் அது மட்டுமல்லாமல் உங்களால் முடிந்த அளவு இந்த புத்தாண்டு அன்று இரண்டு பேருக்கு நீங்கள் அன்னதானம் செய்ய வேண்டும் உங்கள் கைகளால் வாங்கி கொடுக்க வேண்டும்.
இந்த ஐந்து விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதை படிக்கும் போது உங்களுக்கு ஒரு தெளிவு பிறந்து இருக்கும். முதலில் இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைவதற்கு எல்லாம் வல்ல சிவபெருமானின் அருளை பெற வேண்டும். பிறகு நம்முடைய குலதெய்வத்தினுடைய அருளைப் பெற வேண்டும். பிறகு இஷ்ட தெய்வத்தின் உடைய அருளை பெறவேண்டும், பிறகு உபாசனை தெய்வத்தினுடைய அருளை பெற வேண்டும். இந்த ஆண்டு ஒவ்வொரு பக்தர்களுக்கும் நல்ல ஆண்டாக அமைய எல்லாம் வல்ல கடவுளை மனமாக வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயமாக எல்லாமே நல்லதாக நடக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top