வேண்டியதைக் கொடுக்கும் சஷ்டி விரதம் மற்றும் வழிபாடு

வேண்டியதைக் கொடுக்கும் சஷ்டி விரதம் மற்றும் வழிபாடு :-

முருகனுக்கு உகந்த இந்த சஷ்டி விரதம் அன்று நாம் என்ன செய்ய வேண்டும் இதனால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.

சஷ்டி தின வழிபாட்டு முறை:-

● சஷ்டி தினத்தன்று காலையும், மாலையும் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றுங்கள்.
● முருகனுக்கு செந்நிற மாலைகளைச் சூட்டுங்கள். செவ்வரளி மாலை சாத்தி வழிபட்டால், சிக்கல்கள் அனைத்தும் தீரும்.
● வீட்டிலேயே முருகனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து மகிழுங்கள்.
● முருகனுக்கு, எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.

வேண்டியதை கொடுக்கும் சஷ்டி தினம்:-

1.முருகன் படத்திற்கு முன்பு நெய் விளக்கு அல்லது நல்லெண்ணெய் விளக்கேற்றி, கேசரி அல்லது ஏதேனும் இனிப்புகளை நைவேத்தியம் செய்து படைக்க வேண்டும்.
3.மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும்.
4.நவக்கிரக சந்நிதியில் இருக்கும் சந்திரனுக்கு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும்.
5. முருகனுக்கு மிக முக்கியமான நினைத்த காரியம் கைகூடி வர இந்த சஷ்டி விரதம் அன்று விரதம் இருந்து நீங்கள் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றினால் உங்கள் குடும்பத்தில் மங்களம் உண்டாகும் பணம் பேர் புகழ் அந்தஸ்து கைகூடி வரும்.
6. முடிந்தால் சஷ்டி விரதம் அன்று நீங்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை நினைத்து 108 முறை ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி என்ற மந்திரத்தை சொன்னால் உங்கள் மனதில் இருக்கக்கூடிய வலி வேதனை நீங்கும்.
இந்த ஆறு விஷயங்களை நீங்கள் சஷ்டி விரதம் அப்போ கடைப்பிடித்தால் கண்டிப்பாக உங்களுக்கு சகல நன்மைகளும் கைகூடிவரும் முருகனின் அருளும் ஆசியும் உங்களுக்கு நிரந்தரமாக கிடைக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top