வியாழக்கிழமை சாய்பாபாவுக்கு விளக்கு ஏற்றினால் என்ன நன்மைகள் கிடைக்கும்

வியாழக்கிழமை சாய்பாபாவுக்கு விளக்கு ஏற்றினால் என்ன நன்மைகள் கிடைக்கும் :-

வியாழக்கிழமை சாய்பாபாவுக்கு உகந்த நாள் இந்த நாளன்று நீங்கள் சாய்பாபாவுக்கு விளக்கேற்றினால் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

பூமியில் மனித பிறவியில் பிறந்த மகான் யோகி சித்தர் என்று பல பெயரில் அழைக்கப்படக் கூடியவர் தான் சாய்பாபா இவர் என்றும் தன்னுடைய பக்தர்களுக்கு பல வகையில் நன்மைகளை செய்து கொண்டிருக்கின்றார்.

 

அந்த வகையில் சாய்பாபாவுக்கு வியாழக்கிழமை விளக்கேற்றினால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி வாருங்கள் ஒன்றின் பின் ஒன்றாக தெரிந்து கொள்வோம்.
★ வியாழக்கிழமை நீங்கள் சாய்பாபாவுக்கு விளக்கு ஏற்றினால் உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
★ வியாழக்கிழமை சாய்பாபாவுக்கு நெய் தீபம் ஏற்றினால் உங்கள் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும் அதாவது நல்ல காரியங்கள் திருமணம் போன்ற நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம்.
★ வியாழக்கிழமை அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு திரிஒன்றை வைத்து விளக்கு ஏற்றி சாய்பாபாவை மூன்று முறை சுற்றி வந்து அவருக்கு முன் வைத்தால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
பொதுவாவே சாய் அப்பாவுக்கு விளக்கேற்றுவது மிகவும் பிடித்த விஷயம் அதுவும் குறிப்பாக வியாழக்கிழமை நீங்கள் விளக்கேற்றினால் மேலே சொல்லப்பட்ட அந்த மூன்று விஷயங்களும் உங்கள் குடும்பத்தில் சரி உங்களுக்கும் சரி நடக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top