ரிஷபம் ராசி, ரோகிணி நட்சத்திரம் ஜோதிட பாவாதிபதிகள் | Rishabam Rasi, Rohini Natchathiram and Rasi Palan
பாவாதிபதிகள்
சத்துருஸ்தானத்தில் உங்களது இலக்கினாதிபதி இடம் பெற்றிருக்கின்ற அமைப்பின் காரணமாக, நீங்கள் வலிமை மிக்கவராகவும் மற்றும் அனைவரின் போற்றுதலுக்கும் உரியவர் ஆகின்றீர்கள். தேவையான நிறைவான பொருளாதாரம் உடையவர் நீங்கள். தேவைப்பட்டால் சமுதாயத்திற்கு ஒவ்வாத மரபு வழிகளிலிருந்து மாறுபடும் தன்மையை அனுசரிக்கும் இயல்பில் வல்லவர். உங்களுக்கு கடன் இருக்கக்கூடும். ஆனால் உரிய காலத்தில் அவற்றினை திருப்பி செலுத்திவிடும் சக்தி உடையவர் நீங்கள். நீங்கள் இராணுவத்தில் சேர்ந்து உயர்ந்த அதிகாரப் பொறுப்பில் அமரக்கூடும். அன்றி மருத்துவப்பணிகளின் எந்த பிரிவிலும் நீங்கள் ஈடுபடலாம். தங்களின் முன்னேற்றத்திற்காக தங்களது சகோதரர்களிடமிருந்து தாராளமாக உதவியினை எதிர்பார்க்கலாம்.
உங்களது இரண்டாம் பாவாதிபதி உங்களது ஆறாம் பாவத்தில் இருப்பதன் காரணமாக. உங்களது விரோதிகள் மூலம உங்களுக்கு அதிகாரம், சகாயம் மற்றும் ஆதாயங்களடைய வேண்டும் என்பது உங்களது விதி. உங்களது மனப்போக்கு மற்றும் நடைமுறை செயல்களுக்கு ஒத்துவராத நபர்கள். யாராக இருந்தாலும் நீங்கள் அவர்களை ஒடுக்கி நிலைகுலைய செய்துவிடுவீர்கள். எது உங்களுக்கு தேலையோ அதை அடைந்து விடுவீர்கள். ஏதாவது ஒரு சமயத்தில்தான் நீங்கள் இந்த முயற்சியில் தோற்க நேரிடும். கறுப்பு பணச்சந்தை, மற்றவர்களை பயமுறுத்துதல் மற்றும் பிறரை ஏமாற்றிதான் நீங்கள் அளவற்ற செல்வத்தினை அடைந்து உள்ளீர்கள், என்று நீங்கள் விமாசிக்கப்படுவீர்கள்.
உங்களது மூன்றாம் அதிபதி நான்காம் வீட்டில் உள்ளபடியால், நீங்கள் அறிவும் செல்வமும் நிறைந்தவர். மதச்சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்ற உங்களது வாழ்க்கை துணைநலம். அசாத்தியமான அறிவு திறன் வாய்ந்தவர். யாராக இருந்த போதிலும் தேவை இல்லாமல் உங்களது விஷயங்களில் தலையிடுவதை அனுமதிக்க மாட்டீர்கள். நீங்கள் வளர்ப்பு சகோதரர்களை பெற நேரிடும். உங்களது ஐந்தாம் அதிபதி ஒன்பதில் இருக்கின்ற படியால் வானத்தில் மின்னும் தங்க நட்சத்திரம் போல் உங்கள் குடும்பத்தில் நீங்கள் பெருமை யடைவீர்கள், இராஜமரியாதை உங்களுக்கு கிடைக்கும். பிறப்பிலேயே
ஒரு நூலாசிரியராகவோ அல்லது எழுத்தாளராகவோ ஆகும் திறமை நீங்கள் பெற்று இருப்பீர்கள்.
இசைத்துறையில் நீங்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு மனிதநேய உறவு பண்புகளை பலபடுத்துவதற்கு ஒரு பாலமாக உங்களுக்கு அமையும். வீட்டில் குழந்தைகளோடு குதூகலமாக இருந்து ஒவ்வொரு நிமிடமும்
மகிழ்ச்சியாக வாழும் பேற்றினை நீங்கள் பெற்று இருப்பீர்கள். உங்களது குழந்தைகளில் ஒருவர் தலைசிறந்த
நடிகராகவோ அல்லது எழுத்தாளராகவோ ஆவார்கள்.
உங்கள் ஆறாமதிபதி ஒன்பதாம் இல்லத்திலுள்ளபடியால். உங்களது தொழில் வாய்ப்புகள் ஊசலாட்டம்
கொடுக்கும். ஏதோ ஒரு வகையில் கட்டிடம் கட்டும் சம்பந்தப்பட்ட துறையில், நீங்கள் தொடர்பு கொள்ள
நேரிடும். உங்களது தாய்மாமன் மிகவும் பணக்காரராவார். மற்றும் உங்களது தந்தையார் ஒரு நீதிமானாக விளங்குவார், நீங்களும் உங்களது தந்தையாரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ளுதல் இயலாது. உங்களது ஒன்று விட்ட சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களது எதிரிகளைவிட நீங்கள் மேம்பட்டவர்கள் என்பதனை தெள்ளத்தெளிவாக விளக்கும் வகையில் எண்ணற்ற நிகழ்ச்சிகள். உங்களது வாழ்க்கையில் நிகழக்கூடும். அதற்கு பிரதிபலனாக தகுந்த சன்மானங்களை நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்,
உங்கள் எட்டாம் அதிபதி ஒன்பதாம் வீட்டிலிருக்கின்றபடியால். எந்தவிதமான மத நம்பிக்கையும் இல்லாமல் நீங்கள் இருப்பீர்கள். இளமையில் சுதிந்திரமாக இருந்த உங்களது போக்கு வாழ்க்கையில் பலவிதமான கஷ்ட நஷ்டங்களை உங்களுக்குத் தரும். தகப்பனாருடன் அபிப்பிராய பேதம் ஏற்படும். உங்களது கஷ்ட காலத்தின் முடிவில் நீங்கள் உங்களது பல நண்பர்களால் ஏமாற்றப் படுவீர்கள். மேலும் உங்களது மேலதிகாரிகள். உங்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்.
உங்களது பத்தாமதிபதி நான்காம் பாவத்தில் இருக்கின்ற படியால், அனைத்து துறைகளிலும் ஆழ்ந்த அறிவு நீங்கள் அதிர்ஷ்ட வசமாக பெற்றிருப்பீர்கள். உங்களது புலமை மற்றும் இரக்க குணத்திற்காக நீங்கள் மற்றவர்களின் கவனத்திற்கு ஆளாவீர்கள். நீங்கள் விவசாய சம்பந்தமான பணிகளிலோ அல்லது பொருள்களை வாங்கி விற்கும் பணிகளிலோ ஈடுபடலாம். நீங்கள் அரசியலில் தனிப்பட்ட புகமும் வலிமையும் பெற்றிருப்பீர்கள். அரசியல் இயக்க பணிகளால் உங்களது உடமைகளை நீங்கள் இழக்க நேரிடும். உணர்ச்சி பூர்வமாக உங்கள் தாயார் மேல் நீங்கள் கொண்டுள்ள பாசமானது. தந்தையிடம் காண்பிப்பதைவிட அதிகமானது. நீலங்கள். கட்டிடங்கள் மற்றும் வாகன வசதிகள் நன்கு அமையப் பெற்றிருப்பீர்கள். உங்களது நற்குணங்கள் மற்றும் செல்வநிலை காரணமாக, நல்ல பல தொண்டர்களும் மற்றும் இளைவர்களும், உங்களது பணிகளில் ஈடுபாடு கொள்வார்கள்.
உங்கள் பதினொன்றாம் அதிபதி ஆறாம் இல்லத்திலிருக்கின்றபடியால், தாய்வழி மாமன் வர்க்கத்தினரால் ஆதாயம் அடைவீர்கள். மருத்துவ விடுதிகளை நடத்துவீர்கள். படிப்பதில் உங்களுக்கு பிரச்சினைகள் தோன்றக்கூடும். நீங்கள் பிறந்த இடத்தை விட்டு, வெகு தூரத்திற்கு சென்று வாழ்க்கையில் சுகபோகங்களை அடைவீர்கள். நீங்கள் தனியாக சுயமாக பணிபுரிவதைக் காட்டிலும் மற்றவர்களின் கீழ் வேலை பார்த்தல் உங்களுக்கு நன்மை விளைவிக்கும். பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் உங்களை பெரிதும் பாதிக்காது.
உங்கள் பன்னிரண்டாம் அதிபதி பத்தாம் பாவத்தில் உள்ளபடியால், சமுதாயத்தில் நீங்கள் கலந்து உறவாடுபவர்கள் அனைவரும் மேல்வட்ட பிரிவினர் ஆவார். இதனால் உங்களது செலவினங்கள் அதிகரித்து உங்களுக்கு எதிர்காலத்தில் மிகுந்த பொருள் நஷ்டத்தினை தந்துவிடக்கூடும் தந்தையாரின் அரவணைப்பும் ஆசீர்வாதமும் மிகக்குறைவாக உங்களுக்கு இருக்கும். உங்களது மைந்தர்களுடன் சுமுகமான உறவினை நீங்கள் மேற்க்கொள்ளுதல் மிகக்கடினம்.