முனீஸ்வரனை வணங்குவதால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் | பில்லி சூனியம் ஏவல் மற்றும் நவகிரக பாதிப்பிலிருந்து காத்தருளும் முனீஸ்வரன்

நம் முன்னோர்களின் வடிவமாக திகழக்கூடிய முனீஸ்வரன். முனிஸ்வரன் ‘இடம் என்ன வேண்டினாலும் அதை நிச்சயமாக அவர் நிறைவேற்றித் தருவார் என்பதை பக்தர்கள் உணர்ந்த ஒரு விஷயம்

இன்றளவும் தமிழ்நாட்டில் முனீஸ்வரன் பல பேரின் குலதெய்வமாக திகழ்கின்றன. அப்படிப்பட்ட குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறையாவது நிச்சயமாக பூஜை செய்ய வேண்டும். அப்படி பூஜை செய்வதால் அந்த குடும்பத்திற்கு பெருமளவு நன்மைகள் நடைபெறும் என்பது அவர்கள் ஒத்துக் கொண்ட ஒரு உண்மை

அப்படிப்பட்ட முனீஸ்வரனை நாம் வேண்டி வணங்குவதால் நம்முடைய கஷ்டங்கள் நீங்கி நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். எப்படி முனீஸ்வரனை வணங்க வேண்டும் என்பதை இன்று நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம்

வணங்கும் முறை

பொதுவாக முனிஸ்வரன் இடம் நாம் வேண்டுதலை வைக்கும்போது அவர் ஒருவரை ஜாமின் கேட்பார். அதாவது நாம் முனிஸ்வரன் இடம் வேண்டுதலை வைக்கும் போது நமக்கு சொந்தக்காரர் ஜாமீன் அளிக்க வேண்டும், நாம் அந்த வேண்டுதலை நிறைவேறாமல் செய்துவிட்டால் அந்த வேண்டுதலை ஜாமீன் நின்றவர் கட்டாய செய்ய வேண்டும் என்பதற்காக முனீஸ்வரன் ஜாமீன் யாராவது ஒருவரை நிற்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவான். அதனடிப்படையிலேயே இன்றளவும் பக்தர்கள் வேண்டுதலை முனீஸ்வரன் இடம் வைக்கும்போது ஜாமின் சொந்தக்காரர் ஒருவரை நிச்சயமாக முனிஸ்வரன் இடம் அறிமுகம் செய்து வைப்பார் இதனால் அவர்கள் வேண்டிய பலன்கள் அத்தனையும் நிறைவேறி அவர்கள் சுபகாரியங்கள் அனுபவித்தார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

முனீஸ்வரனை வேண்டுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. பில்லி சூனியம் ஏவல் எதுவாக இருந்தாலும் முனிஸ்வரன் இடம் சென்று அவரை வணங்கி அவருக்கு எதிரில் இருக்கக்கூடிய சூலத்தில் நம் தலையை சுற்றி எலுமிச்சை பழத்தை அந்த சூலத்தில் குத்தும்போது அத்தனை பில்லி சூனிய ஏவல் ஒழிந்து போகும் என்பது ஐதீகம்.

2. குழந்தை இல்லாதவர்கள் முனீஸ்வரன் இடம் வேண்டி குழந்தை பாக்கியம் கொடுத்தால் நான் நிச்சயமாக உனக்கு வேண்டியதை செய்வேன் என்று வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

3. உடல் ரீதியான எந்த ஒரு நோயாக பிரச்சினையாக இருந்தாலும் முனீஸ்வரனை மனதார வேண்டினால் நிச்சயமாக நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

4. நம் வீட்டுக்கு யார் கெடுதல் செய்ய நினைத்தாலும் வாரத்திற்கு ஒருமுறை முனீஸ்வரனை வணங்கி வந்தால் நிச்சயமாக அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

5. நம் முன்னோர்களின் வடிவமாக திகழக்கூடிய முனீஸ்வரனை வணங்குவதால் சகல சௌபாக்கியங்களும் கிடைத்து மங்களம் உண்டாகும்.

6. மிக முக்கியம் நம் வீட்டுக்கு காவல் தெய்வமாக இருந்து நம்மையும் நம் வீட்டையும் நம் வீட்டை சுற்றி உள்ளவர்களையும் காப்பாற்றி வாழ வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இப்படிப்பட்ட முனீஸ்வரனை வாரத்திற்கு ஒரு முறையாவது நிச்சயமாக முனீஸ்வரன் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்வதால் அனைத்து சகல சவுபாக்கியங்களும் நமக்கு கிட்டும்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top