பௌர்ணமி அன்றி இந்த கடவுளை வணங்கினால் உங்கள் வாழ்க்கையில் சகல நன்மைகளும் நடக்கும் இது சத்தியம்

பௌர்ணமி அன்று அதாவது முழு நிலவு கண்ணுக்கு தெரிகின்ற அன்று சந்திர பகவானை மனதார நினைத்து அவருக்கு பூஜை செய்து வணங்குவதன் மூலமாக நமக்கு எந்த அளவுக்கு நற்பணங்கள் கிடைக்கிறதோ அதைவிட ஒரு மடங்கு அதிகமாகவே சத்திய நாராயணனை வணங்கும்போது நமக்கு கிடைக்கிறது. இந்த பதிவில் பௌர்ணமி அன்று சத்திய நாராயண பூஜை செய்வது எப்படி அவரை வணங்குவது எப்படி அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இன்று இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம்.

பெருமாளினுடைய அவதாரமாக திகழக்கூடிய சத்திய நாராயணன் இவரை வணங்குவதால் சகல நன்மைகளும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சத்திய நாராயணன் பூஜை உங்கள் வீட்டு அருகில் இருக்கக்கூடிய கோவிலில் நடந்தால் கலந்து கொண்டு அவரை வணங்கி வந்தாலே சகல நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும் அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

சத்திய நாராயணன் வணங்கும் முறை:

உங்கள் வீட்டுக்கு அருகில் சத்திய நாராயணன் சிலையோ அல்லது கோவிலோ இருந்தால் அந்த சிலைக்கு நீங்கள் பூஜை செய்ய வேண்டும். அதாவது வெற்றிலை பாக்கு, பூ, தேங்காய், மஞ்சள், குங்குமம், ஊதுபத்தி அனைத்தையும் வாங்கிக் கொண்டு அவருக்கு பிடித்தமான நெய்வேதியம் ஏதாவது ஒன்று வெண்பொங்கலோ அல்லது இனிப்பு சார்ந்த ஏதோ ஒன்று செய்து எடுத்துக் கொண்டு போக வேண்டும். அந்த சிலைக்கு மனதார வேண்டி உங்கள் கையால் பூஜை செய்து பௌர்ணமி அன்று வணங்க வேண்டும் இதனால் நமக்கு சகல நன்மைகளும் கிடைக்கும் .

உங்கள் வீட்டு அருகில் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் கவலை வேண்டாம் உங்கள் வீட்டில் சத்திய நாராயணன் புகைப்படத்தை வைத்து நீங்கள் பூஜை செய்யலாம். அதாவது புகைப்படத்தை நன்றாக துடைக்க வேண்டும் ஒரு பலகையை விரித்து போட்டு அதன் மீது மஞ்சள் நிற ஆடையை போட வேண்டும் பிறகு சத்திய நாராயணன் புகைப்படத்தை வைத்து அவருக்கு இஷ்டமான மஞ்சள் பூவை சாத்தி அவருக்கு முன்பாக இரண்டு நெய் விளக்கு ஏற்ற வேண்டும் பிறகு அவருக்கு பிடித்தமான நெய்வேத்தியத்தை படைத்து வைத்துவிட்டு மனமார்ந்த வேண்டி பூஜை செய்தாலே போதுமானது ஆடம்பரமாக பூஜை செய்ய வேண்டும் என்று எதுவும் கட்டாயம் கிடையாது உங்கள் வசதிக்கு என்ன முடியுமோ அதை செய்தால் போதுமானது.
சத்திய நாராயணனை வாங்குவதால் கிடைக்கும் நன்மைகள்:

1. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்

2. தொழிலில் வளர்ச்சி இல்லாதவர்கள் சத்தியநாராயணனுக்கு பூஜை செய்வதன் மூலமாக குறிப்பாக பௌர்ணமி அன்று சத்திய நாராயணனை வணங்குவதால் சகல நன்மைகளும் கிடைத்து தொழிலில் லாபத்தை காண முடியும்.

3. மன கஷ்டம் பணகஷ்டம் இப்படி கஷ்டங்களால் கவலைப்படக்கூடிய ஒவ்வொருவரும் சத்திய நாராயணனை வணங்கும்போது சகல நன்மைகளையும் பெற்று மனதில் இருக்கக்கூடிய அத்தனை பாரங்களும் தீரும் என்பது சத்தியம்.

4. சத்திய நாராயணனை வணங்குவதால் நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்கி எளிதில் திருமணம் நடக்கும் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் தொழில் விருத்தி அடையாதவர்களுக்கு தொழில் வளர்ச்சி கிடைக்கும் குடும்பத்தில் நிம்மதி இல்லாதவர்களுக்கு நிம்மதி ஓங்கும் இப்படி பல விஷயங்கள் சத்திய நாராயணனை வணங்குவதால் ஒருவருக்கு கிடைக்கிறது..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top