பௌர்ணமி அன்று அதாவது முழு நிலவு கண்ணுக்கு தெரிகின்ற அன்று சந்திர பகவானை மனதார நினைத்து அவருக்கு பூஜை செய்து வணங்குவதன் மூலமாக நமக்கு எந்த அளவுக்கு நற்பணங்கள் கிடைக்கிறதோ அதைவிட ஒரு மடங்கு அதிகமாகவே சத்திய நாராயணனை வணங்கும்போது நமக்கு கிடைக்கிறது. இந்த பதிவில் பௌர்ணமி அன்று சத்திய நாராயண பூஜை செய்வது எப்படி அவரை வணங்குவது எப்படி அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இன்று இந்த பதிவில் நாம் பார்க்க போகின்றோம்.
பெருமாளினுடைய அவதாரமாக திகழக்கூடிய சத்திய நாராயணன் இவரை வணங்குவதால் சகல நன்மைகளும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சத்திய நாராயணன் பூஜை உங்கள் வீட்டு அருகில் இருக்கக்கூடிய கோவிலில் நடந்தால் கலந்து கொண்டு அவரை வணங்கி வந்தாலே சகல நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும் அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
சத்திய நாராயணன் வணங்கும் முறை:
உங்கள் வீட்டுக்கு அருகில் சத்திய நாராயணன் சிலையோ அல்லது கோவிலோ இருந்தால் அந்த சிலைக்கு நீங்கள் பூஜை செய்ய வேண்டும். அதாவது வெற்றிலை பாக்கு, பூ, தேங்காய், மஞ்சள், குங்குமம், ஊதுபத்தி அனைத்தையும் வாங்கிக் கொண்டு அவருக்கு பிடித்தமான நெய்வேதியம் ஏதாவது ஒன்று வெண்பொங்கலோ அல்லது இனிப்பு சார்ந்த ஏதோ ஒன்று செய்து எடுத்துக் கொண்டு போக வேண்டும். அந்த சிலைக்கு மனதார வேண்டி உங்கள் கையால் பூஜை செய்து பௌர்ணமி அன்று வணங்க வேண்டும் இதனால் நமக்கு சகல நன்மைகளும் கிடைக்கும் .
1. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
2. தொழிலில் வளர்ச்சி இல்லாதவர்கள் சத்தியநாராயணனுக்கு பூஜை செய்வதன் மூலமாக குறிப்பாக பௌர்ணமி அன்று சத்திய நாராயணனை வணங்குவதால் சகல நன்மைகளும் கிடைத்து தொழிலில் லாபத்தை காண முடியும்.
3. மன கஷ்டம் பணகஷ்டம் இப்படி கஷ்டங்களால் கவலைப்படக்கூடிய ஒவ்வொருவரும் சத்திய நாராயணனை வணங்கும்போது சகல நன்மைகளையும் பெற்று மனதில் இருக்கக்கூடிய அத்தனை பாரங்களும் தீரும் என்பது சத்தியம்.