பஞ்ச தீபம் ஏற்றுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் மற்றும் பஞ்ச தீபம் என்றால் என்ன.? Pancha deepam endral enna

பஞ்ச தீபம் ஏற்றுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் மற்றும் பஞ்ச தீபம் என்றால் என்ன.?

பஞ்ச தீபம் ஏற்றுவதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன பொதுவாக நாம் கோவில்களில் பார்த்திருப்போம். பஞ்ச தீபத்தை கடவுளுக்கு ஆரத்தி காட்டுவதையும் பல பூஜைகளில் நம்மால் அதை காண முடியும் சரி இந்த பஞ்ச தீபம் எதற்கு காட்டப்படுகிறது என்றால் பல நன்மைகள் அந்த பஞ்ச தீபத்தால் அங்கு வழிபாடு செய்யக்கூடிய பக்தர்களுக்கும் சரி அந்த வழிபாட்டு முறையை செய்யக்கூடிய ஐயருக்கும் சரி ஒரு நல்ல பலனை கொடுக்கும் என்பது ஒரு ஐதீகமாக பார்க்கப்படுகிறது பஞ்ச தீபம் என்றால் என்ன இதனுடைய நன்மைகள் என்ன என்பதை பற்றி வாருங்கள் பார்க்கலாம்.

பஞ்ச தீபம் என்றால் என்ன
பஞ்ச தீபம் என்பது ஐந்து வகையான எண்ணெய்களை கொண்டு கடவுளுக்கு ஆரத்தி காட்டக்கூடிய ஒரு தீபம் இதில் என்ன வகையான எண்ணெய்களை அவர்கள் பயன்படுத்துவார்கள் என்றால் முதலில் இழுப்ப எண்ணை இரண்டாவதாக விளக்கெண்ணெய் மூன்றாவதாக தேங்காய் எண்ணெய் நான்காவது வேப்ப எண்ணெய் ஐந்தாவதாக பசு நெய் இந்த ஐந்து வகையான எண்ணெய் களையும் சம அளவில் கலந்து ஐந்து வகையான பஞ்ச தீபத்தில் ஊற்றி பஞ்ச தீபம் ஏற்றி குறிப்பாக சிவன் கோவில்களில் திங்கட்கிழமை என்று மாலை நேரத்தில் இந்த பஞ்ச தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்தால் நமக்கு சகல நன்மைகளும் கிடைக்கும்.
பஞ்ச தீபத்தை ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன
★ பஞ்ச தீபத்தை ஏற்றுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பல இருக்கின்றன அதில் குறிப்பாக சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பல நன்மைகளை வாரி கொடுக்கக்கூடிய ஒரு ஆரத்தி என்றால் ஒரு தீபம் என்றால் அது பஞ்ச தீபம் என்று சொல்லலாம்.
★ பஞ்சதீபம் ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்தால் குடும்பத்தில் கஷ்டங்கள் விலகும்.
★ பஞ்ச தீபத்தை ஏற்றி சிவபெருமானை வழிபாடு செய்தால் தொழிலில் வளர்ச்சிகள் கிடைக்கும்.
★ பஞ்ச தீபத்தை ஏற்றி சிவனை வழிபாடு செய்தால் மனக்குறைகளும் மனவேதனைகளும் அகழும்.
★ பஞ்ச தீபத்தை ஏற்றி கடவுளுக்கு ஆரத்தி காட்டினால் கடவுளின் உடைய அனுகிரகம் முழுமையாக உங்களுக்கு கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top