நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய சாய் பாபா பொன்மொழிகள்

சாய் பக்தர்களுக்கு வணக்கம் நம்முடைய வாழ்க்கையை மாற்றக்கூடிய சாய்பாபாவின் பொன்மொழிகளை இன்று நாம் பார்க்கப் போகின்றோம்

நம்மை பற்றி குறை கூறக் கூடிய யாரும் நமக்கு ஒரு ரூபாய்கூட கொடுத்து உதவப் போவது கிடையாது. அதனால் மற்றவர்கள் பேசக் கூடிய எந்த ஒரு பேச்சுக்கும் நாம் காது கொடுத்து கேட்க கூடாது
இந்த உலகம் மிகப் பெரியது இதில் நம் வாழ்க்கை மிகச் சிறியது. மற்றவர்களுக்காக வாழ்வதை விட நமக்காக, நம் சந்தோஷத்திற்காக, நாம் வாழ்கின்றோம் என்பதை. நீங்களே ஒருமுறை கேட்டுப்பாருங்கள்

சாய் அப்பா நம்மோடு இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கு முன் அவர் சென்று, அந்த காரியத்தை எளிதாக செய்து முடித்துவிட்டு நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார்

நீங்கள் இன்று பிரச்சனையாக என்ன கூடிய அத்தனை விஷயத்தையும் சாய் அப்பா ஏற்கனவே தீர்த்து விட்டு, தீர்ந்த பிரச்சனை தீர வேண்டும் என்று சாய் அப்பாவிடம் தினமும் புலம்பிக் கொண்டு இருக்கின்றீர்கள்

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் மன கஷ்டத்தில் இருக்கும்போது உங்களை சுற்றி நடக்கக்கூடிய அத்தனை நல்ல விஷயங்களும் உங்கள் கண்ணுக்குத் தெரியாது என்பது உண்மை

எல்லாம் வல்ல சாய்நாத் உங்களோடு இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறர் இனி வரும் காலம் வசந்த காலமாக அமையப்போகிறது.

ஓம் சாய் ராம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top