துலாம் ராசி / விசாகம் நட்சத்திரம் / மகரம் லக்கினம் / பாவாதிபதிகள்

பாவாதிபதிகள்
இலக்கினாதிபதி தனம், குடும்பம், வாக்கு, கல்வி, பற்றிக் கூறுகின்ற இலக்கின இரண்டாம் பாவத்தில் இருக்கின்றபடியால் நீங்கள் அறிவு சார்ந்தவர்களாகவும். மதப்பற்று உள்ளவர்களாகவும் மற்றும் மற்றவர்களால் போற்றுதற்குரிய உயர்ந்த சிறப்பு அம்சங்கள் கூடிய மகிழ்ச்சிக்குரிய வாழ்க்கைக்குரியவர் ஆவீர்கள். தங்களுடைய பேச்சாற்றலாலும், பின் வருவதை முன் நோக்கக்கூடிய தீர்க்க தரிசனத்தினாலும் மற்றவர்களை.

நீங்கள் எளிதில் கவர்வீர்கள். உங்களது இரண்டாம் வீட்டிற்குடையலன் இரண்டாம் வீட்டிலேயே இருப்பதால் உங்களுக்கு பொருளாதார வலிமையுண்டு. உங்களது தன்னம்பிக்கையும் ஞான செருக்கும், மற்றவர்களால் தவறாக புரிந்துகொள்ளப்படும். புகழ்ச்சிக்கு மயங்க வேண்டாம். உங்களது அறிவுடைமை நிறைவுடையதாகும். இருப்பினும் அதனை சந்தேகித்து கேள்விகேட்பவர்களிடம் நீங்கள் பொறுமை இழந்து விடுவர்கள். உங்களது குடும்ப
உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாகும்.
உங்களது மூன்றாம் அதிபதி பத்தாம் வீட்டில் இருக்கின்றபடியால் உங்களது வாழ்க்கையை நீங்களே அமைத்துக் கொள்வீர்கள். ஏராளமான சொத்துக்கள் நீங்கள் பெற்றிருப்பதின் காரணமாக, உலகத்திலுள்ள அனைத்து விதமான மக்ழச்சிகளையும் நீங்கள் எளிதில் பெறுவீர்கள். முடிவில் தவறான இன்பங்களை அனுபவித்ததின் காரணமாக ஒரு சோகத்திற்கு நீங்கள் ஆளாக நேரிடும். இருந்த போதிலும் எதனையும் ஒப்புக்கெள்ளும் மனோபாவத்தாலும், மற்றும் உங்களது சில மனிதப் பண்புகளின் காரணமாகவும் மற்றவர்கள் உங்களது நிலைக்காக மனமிரங்கி வருத்தப்படக்கூடும். தொழில் தொடர்பான பயணங்களை நீங்கள் மேற்க் கொள்ள நேரிடும். உங்களது அனைத்து சகோரர்களும் திறமையாக பிரகாசிப்பார்கள் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் உங்களுக்கு உபயோகமாக இருப்பார்கள்.
உங்கள் ஐந்தாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் அமைந்துள்ள படியால் உங்களுக்கு வாரிசு பாக்கியம் ஏற்படுவதில் பிரச்சனைகள் தோன்றக்கூடும். உடனுக்குடன் முடிவு எடுப்பதிலுமே மற்றும் மகிழ்ச்சியாக இருப்பதுமே வாழ்க்கையின் பொருளார்ந்த அர்த்தங்கள் என்று எண்ணி நீங்கள் வாழ்வீர்கள். நீங்கள் யாரையும் ஏமாற்றுவதோ, சொல் ஒன்று பொருள் ஒன்றாக செயல்படும் பண்புகளோ இல்லாதிருப்பீர். வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை உங்கள் குழந்தைகள், உங்களிடமிருந்து கற்றுப் பயனடையும். ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக இயங்கும் மைந்தர்களை நீங்கள் பெற்றிருப்பீர்கள். கணிதத்தில் நீங்கள் தலைசிறந்த நிபுணர் ஆவீர்கள் அல்லது மதச்சம்பந்தபட்ட நிறுவனத்தின் தலைமைப்பதவியை நீங்கள் அடைவீர்கள்,
உங்கள் ஆறாமதிபதி நான்காம் வீட்டில் இருக்கின்றபடியால். கதை எழுதக்கூடிய அளவிற்கு அறிவு வண்மை உடையவர். கிடைக்கும் செய்திகளை கொண்டுகூட்டி உங்களது கற்பனைவளம் சேர்த்து எழுநக்கூடிய ஆற்றல் பெற்றவர். உங்கள் உள்ளத்தில் ஒளிந்து கிடக்கும் பொறாமை சக்திகளிவிருந்து உங்களால் விடுபடுதல் இயலாது. தாயினை இழந்து விடுவோமோ என்ற இளம் பிராயத்து மன பீதி உங்கள் அடிமனத்தின் ஆழத்தினைவிட்டு இன்னும் அகலாதபடியால், தாய் எந்த சமயத்திலும் உங்களைவிட்டு பிரியக்கூடும் என்ற பீதி இன்னும் உங்களிடம் உறைந்துள்ளது. நல்வியில் உங்களுக்கு தொய்வு ஏற்பட்டிருக்கும். மற்றவர்கள் உங்களை எண்ணுவதுபோல நீங்கள் திடமான மனஉறுதி கொண்டவர் அல்லர். உங்களது மூதாதையர் சொத்துக்கள் கடனில் சிக்க நேரிடும். பணியாளர்களால் பிரச்சினைக்கு நீங்கள் ஆளாவீர்கள்.
உங்கள் எட்டாம் அதிபதி நான்காம் வீட்டிலுள்ளபடியால், இளமை காலத்திலிருந்தே உங்களது தாயாரை விட்டு பிரிந்து வாழ நேரிடும். நீங்கள் வளர்கின்ற இடம் உங்களது விடாக இருக்காது. அதிகமான மனித நேயம் மற்றும் திடமான சுயக்கட்டுபாடும் உடையவர். ஆனால் இத்தகைய உணர்வு பூர்வமான மன நெகிழ்ச்சிகளை உங்களுடன் கருத்து ஒருமித்து பழகுபவர்களுக்கிடையே மட்டுமே. நீங்கள் காண்பிக்க முடியும். ஒருவர் தேவதையா அல்லது பிசாசா என்பதனை தீர்மானத்திற்கு கொண்டுவர முடியாமல் நீங்கள் தள்ளாடுவீர்கள். சுருக்கமாகச் சொல்ல போனால். நீங்கள் மன அமைதி இழந்தவராகவே காணப்படுவீர்கள். பொருளாதாரம் சார்ந்த மற்றும் பல குடும்ப பிரச்சினைகள் உங்களை வாட்டும். ஒரு காலகட்டத்திற்கு பிறகு பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீடு மற்றும் போக்குவரத்து வாகனங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு வெகு சாமர்த்தியமாக தீர்வு காண்பீர்கள், ஒரு காலகட்டத்தில் தொழிவில் சரிவு ஏற்பட்டு, தொழிலில் உங்களுக்கு மேல் இருந்துகொண்டு உங்களை கண்காணிப்பவர்களால், உங்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படும். பிரச்சனைகளை மன உறுதியுடனும் மற்றும் கடவுள் நம்பிக்கையுடனும் நீங்கள் எதிர்கொள்வீர்கள்.
உங்களது பத்தாமதிபதி ஐந்தாம் வீட்டினுள்ளபடியால், வியாபாரத்தில் ஒரு இடைத்தரகராக விளாங்குவீர்கள். ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு மிக எளிமையான வாழ்க்கையினை வாழ்வீர்கள். அனாதை ஆசிரமங்களில் ஈடுபாடு கொள்வீர்கள், ஆரம்பத்திலிருந்தே பேச்சு மற்றும் செயல்களில் உள்ளத்தூய்மையினை கடைபிடிக்க வேண்டும் என்பதே உங்கள் விருப்பமாகும். எல்லாவித சுகபோகங்களும் நீங்கள் பெற்றிருப்பீர்கள். பணக்கார நண்பர்களுடன் உயர்மட்ட உல்லாச அரங்குகளில் காணப்படுவீர்கள். இது உங்களது பணிகளில் நீங்கள் மேன்மையற வழி வகுக்கும்,
உங்கள் பதினொன்றாம் அதிபதி மூன்றாம் இல்லத்தில் இருக்கின்றபடியால். நீங்கள் இசைத்துறையில் ஈடுபட்டு பொருள் ஈட்டுவீர்கள். உங்களது முன்னேற்றத்திற்கு உங்களது சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அண்டை அயலாரும் மற்றும் நண்பர்களும் தொடர்ந்து உங்களை நாடி வரக்கூடும், உங்களது திறமைகளை யாரும் குறைவாக கருத முடியாது. இயற்கையிலேயே பலம் பொருந்திய சக்திகள் பெற கடவுளால் ஆசிர்வதிக்க பாட்டவர் நீங்கள்,
உங்கள் பன்னிரண்டாம் அதிபதி பத்தாம் பாவத்தில் உள்ளபடியால், சமுதாயத்தில் நீங்கள் கலந்து உறவாடுபவர்கள் அனைவரும் மேல்வட்ட பிரிவினர் ஆவார். இதனால் உங்களது செலவினங்கள் அதிகரித்து உங்களுக்கு எதிர்காலத்தில் மிகுந்த பொருள் நஷ்டத்தினை தந்துவிடக்கூடும் தந்தையாரின் அரவணைப்பும் ஆசீர்வாதமும் மிகக்குறைவாக உங்களுக்கு இருக்கும். உங்களது மைந்தர்களுடன் சுமுகமான உறவினை நீங்கள் மேற்க்கொள்ளுதல் மிகக்கடினம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top