திருவோணம் நாளன்று திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இதை செய்யலாம் திருவோணம் நட்சத்திரத்தில் பிறக்காதவர்கள் கூட இந்த திருவோண நாள் அன்று இதை செய்வதன் மூலமாக ஒரு மாற்றத்தை அவர்களால் காண முடியும்.
திருவோண நட்சத்திரம் பெருமாளின் உடைய நட்சத்திரம் என்று அனைவருக்கும் தெரியும். இந்த திருவோண நட்சத்திர தினத்தன்று நீங்கள் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வணங்குவதன் மூலமாக உங்களுக்கு பெருமாளின் அருளும் அன்பும் சிறப்பும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
குறிப்பாக வாமன மூர்த்தி அவதாரத்தை வணங்குவதன் மூலமாக மிகப் பெரிய மாற்றம் கிடைக்கும். ஒருவேளை வாமன மூர்த்தி கோவில்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றால் வாமன மூர்த்தி அவதாரம் கொண்ட புகைப்படத்தை வைத்து வணங்குவதன் மூலமாக பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.
பழி சக்கரவர்த்திக்கு அருளிய வாமன மூர்த்தியை இந்த திருவோண நாள் அன்று வணங்கினால் பெயர் புகழ் அந்தஸ்து செல்வாக்கு நோயில்லாத வாழ்க்கை போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
திருவோண விரதம் இருப்பதால் என்ன நன்மைகள் :-
- திருவோணம் விரதம் இருப்பதால் நமக்கு பல நன்மைகளை வாமன மூர்த்தி வழங்குகிறார் . குறிப்பாக பெருமாளை வணங்குவதால் அவருக்கு பிடித்தமான துளசி மாலையை அணிவித்து வணங்குவதால் சகல நன்மைகளும் நமக்கு கொடுத்து அருள் புரிகின்றார். அந்த வகையில் திருவோண நாளன்று திருவோண விரதம் இருந்தால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
- நீங்காத செல்வம் கிடைத்து பேர் புகழ் அந்தஸ்தோடு வாழக்கூடிய நிலைமையை திருவோண விரதம் உங்களுக்கு அமைத்துக் கொடுக்கும்.
- மணக்குறைகள் மன அழுத்தம் மன பாரம் அகன்று சந்தோஷ வாழ்வு உங்களுக்கு கிடைக்கும்.
- பெண்கள் விரும்பிய அத்தனை விஷயங்களும் திருவோண விரதம் இருந்து வாமன மூர்த்தி மற்றும் பெருமாளை வணங்குவதால் பெண்கள் விரும்பியதை அடைவார்கள்.
- திருமணம் தாமதமாக இருக்கக்கூடிய அத்தனை பேரும் திருவோண விரதம் அன்று திருவோணம் விரதம் இருந்து வாமன மூர்த்தி மற்றும் பெருமாளை வணங்கி ஒவ்வொரு மாதமும் வந்தாள் திருமணம் தாமதமாகி கொண்டிருக்கக் கூடிய திருமண தடைகள் நீங்கி விரைவில் வரன் அமையும்.