சீரடி சாய்பாபாவை எப்படி வணங்க வேண்டும்.?

சீரடி சாய்பாபாவை எப்படி வணங்க வேண்டும்.? :-

சீரடி சாய்பாபாவை நாம் எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.

மனித உருவத்தில் பிறந்த மகான் சீரடி சாய்பாபா அவர் வாழும் காலங்களில் என்னை இப்படி தான் வணங்க வேண்டும் என்று அவர் எந்தவித கட்டளையும் விடவில்லை அவர் இந்த மண்ணுலகை விட்டு சென்ற போது கூட என்னை பார்க்க வரும் பக்தர்கள் அனைவரும் உணவு உண்ட பிறகு என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னவர் சீரடி சாய்பாபா.
மாமிசம் சாப்பிட்டு விட்டு சாய் அப்பாவின் பெயரை சொல்லலாமா சாய் அப்பாவை வணங்கலாமா.?
1. நீங்கள் அசைவம் உணவை சாப்பிட்டுவிட்டு கூட சாயப்பாவின் பெயரை சொல்லலாம் அதனால் எந்தவித தவறும் அல்ல சாயப்பா உங்களுக்கு எந்தவிதமான கெடுதலையும் செய்ய மாட்டார் தைரியமாக எந்த நேரம் எந்த நாள் வேண்டுமானாலும் சாய்ராம் என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தலாம்.
2. சாய் அப்பாவின் மூலமந்திரம் உங்களுக்கு கஷ்டங்கள் வரும்போது இந்த மந்திரத்தை அடிக்கடி சொல்ல மறந்து விடாதீர்கள்.
ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய்ராம்
3. சாய் அப்பாவின் புகைப்படம் உடைந்தால் அல்லது சாய அப்பாவின் சிலை உடைந்தால் ஏதாவது தவறுகள் நடந்து விடுமா என்று எண்ணம் வேண்டாம் இது காலத்தின் கட்டாயம் இந்த நேரம் உங்கள் முன் உங்கள் கையால் இந்த புகைப்படம் அல்லது இந்த உருவ சிலை உடைய வேண்டுமென்று கருமா விதிக்கப்பட்டிருக்கிறது அதன்படி அது நடந்திருக்கிறது தவிர உங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நீங்கள் ஒரு பொம்மை.
4. மிகப்பெரிய பூஜைகள் புனஸ்காரங்கள் செய்தால் தான் சாய் அப்பாவை வணங்க முடியுமா சாய் அப்பாவின் அருள் நமக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் வேண்டாம் நீங்கள் எந்த பூஜையும் செய்யாமல் மனதிற்குள் சாயப்பவை நினைத்து வேண்டினால் போதுமானது அவர் சகல நன்மைகளையும் உங்களுக்கு செய்வார் .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top