சாய்பாபா நிகழ்த்திய அற்புதம் / தன் பக்தனின் கோபத்தை சந்தோஷம் நிறைந்த நேரமாக மாற்றிய சாய்பாபாவின் உண்மை கதை :-
சாய்பாபா தன் பக்தனின் கோபத்தை குறைத்து அவனுக்கு சந்தோஷம் நிறைந்த நேரத்தை பரிசாக கொடுத்த உண்மை கதையை பற்றி இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகின்றோம்.
ராஜ்குமார் என்ற தீவிர சாய்பாபா பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார் அவர் ஒரு நாள் சென்னைக்கு வேலை காரணமாக சென்று இருக்கின்றார் அந்த வேலை முடிய வேண்டும் என்று சாய்பாபாவிடம் பிரார்த்தனை ஒரு நாள் முன்பு செய்துவிட்டு சென்றார்.
ஆனால் போன காரியம் நடக்கவில்லை அவனுக்கு முன் சென்ற ஒருவருக்கு எளிதில் முடிந்த அந்த வேலை ராஜ்குமாருக்கு தாமதமாகின சாயப்பாவை பயங்கரமாக வேண்டுகின்றான் எனக்கு இந்த வேலையை எப்படியாவது முடித்துக் கொடுங்கள் சாயப்பா என்று கண்ணீர் மல்க சாய் அப்பாவிடம் போராடுகின்றார் ஆனால் சாய் அப்பா செவி சாய்க்கவில்லை ராஜ்குமார் சென்ற வேலையும் முடியவில்லை ராஜ்குமார் சென்ற நாள் புதன்கிழமை..
அடுத்த நாள் வியாழக்கிழமை வழக்கம்போல் ராஜ்குமார் தன்னுடைய சொந்த ஊருக்கு வருகிறார் வழக்கம் போல் அவர் பாபாவை பார்க்கக்கூடிய அந்த பாபா கோவிலுக்கு செல்கிறார் ஆனால் அங்கு பாபாவிடம் சண்டை போட வேண்டும் என்ற நோக்கத்தில் போகின்றார் ஆனால் பாபாவை பார்த்தவுடன் எனக்கு இப்படி செய்து விட்டீர்களே இது உங்களுக்கு அடுக்குமா என்று மனதிற்குள் சாயப்பாவிடம் ஆக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றான் சாய்பாபாவின் பக்தன் ஆகிய ராஜ்குமார்.
மனதிற்குள் சாய் அப்பாவிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில் அங்கு 200 கணக்கான பக்தர்கள் சாய்பாபாவின் பஜனையில் கலந்து கொண்டு பாபாவை வணங்கிக் கொண்டிருக்கின்றன ஆனால் மனதிற்குள் ராஜ்குமாருக்கும் பாபாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது அந்த சமயத்தில்.
பாபாவுக்கு ஆரத்தி செய்து கொண்டிருந்த பூசாரி ஒருவர் ராஜ்குமார் அழைத்து 200 பேருக்கு முன்பு நம் கோவிலின் பெருமைகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடிய மிக முக்கியமான நபர் இந்த ராஜ்குமார் தான் என்று 200 பேருக்கு முன் ராஜ்குமாருக்கு பெருமை செலுத்துகிறார் அப்போது ராஜ்குமார் மனதில் தோன்றிய விஷயம் ஒன்றுதான்.
சாய் அப்பா உன்னிடம் நான் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கின்றேன் என்னை சமாதானப்படுத்துவதற்காக நீங்கள் இத்தனை பேர் முன்னாடி என்னை பெருமைப்படுத்த ஒரு காரியம் செய்தீர்களே என்று அந்த பூசாரி பேசிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ராஜ்குமார் மனதில் தோன்றிய விஷயம் இது.
இதைப் படிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது சாய் அப்பா எப்போதும் தன்னுடைய பக்தர்களை கை விடுவதில்லை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னுடைய பக்தர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்பதை அவ்வபோது பார்த்துக் கொண்டிருக்க கூடிய ஒரே கடவுள் சாய்பாபா.
இதை உணர்ந்த ராஜ்குமார் நீ எது செய்தாலும் அது நல்லதுக்கு தான் இருக்கும் சாய்பாபா என்று சொல்லி அந்த வேலையை இன்னொரு நாள் செய்து முடித்து வெற்றி பெற்றார்.