சாய்பாபாவை எப்படி வணங்குவது? சாய்பாபாவை எப்படி வணங்கினால் நமக்கு நன்மைகள் கிடைக்கும்.?

சாய்பாபாவை எப்படி வணங்குவது? சாய்பாபாவை எப்படி வணங்கினால் நமக்கு நன்மைகள் கிடைக்கும்.?

சாய்பாபாவை எப்படி வணங்குவது? சாய்பாபாவை எப்படி வணங்கினால் நமக்கு நன்மைகள் தருவார் என்ற சந்தேகம் நிச்சயமாக சாய் பக்தர்கள் பல பேருக்கு இருக்கும். அவர்களுக்கு தெளிவுபடுத்தக்கூடிய பதிவாகத்தான் இந்த பதிவு இருக்கப் போகிறது. இதை முழுமையாக படியுங்கள் உங்களுக்கே ஒரு தெளிவு கிடைக்கும்.

சாய்பாபா என்பவர் 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மகான், சித்தர், யோகி, இன்று தமிழ்நாட்டில் 18 சித்தர்கள் வாழ்ந்தது போல சீரடி சாய்பாபாவும் ஒரு சித்தர். இன்று பல அவருடைய பக்தர்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் பல நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம். அந்த வகையில் அவரை நாம் வீட்டில் பூஜை செய்தால் நமக்கு நல்லதா அல்லது கோவிலில் பூஜை செய்தால் நமக்கு நல்லதா. அவரை வழிபட வேண்டும் என்றால் ஆடம்பரமான அலங்காரங்களும் பூஜைகளும் செய்து தான் வழிபட வேண்டுமா இப்படி பல சந்தேகங்கள் இருக்கும் அதை தான் இங்கு நாம் தெளிவுபடுத்த போகின்றோம்.

1. முதலில் சாய அப்பாவை வணங்கும்போது நீங்கள் ஆடம்பரமாக பூஜை செய்து வணங்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. அவர் வாழ்ந்த காலத்தில் கூட அவர் இவ்வாறுதான் என்னை வழிபட வேண்டும் என்று எங்கும் சொன்னதல்ல, எழுதிய புத்தகத்தில் கூட அதை அவர்கள் தெரிவித்ததல்ல. அதனால் உங்கள் வசதிக்கு ஏற்ப உங்களால் முடிந்த அளவிற்கு நீங்கள் பூஜைகள் செய்து பூஜை அலங்காரங்கள் செய்து வேண்டினால் கூட முழு பழனையும் உங்களால் அனுபவிக்க முடியும்.

2. வீட்டில் சாய்பாபாவை வணங்கினால் சக்தி கிடைக்குமா அல்லது கோவிலுக்கு போனால் நமக்கு சக்தி கிடைக்குமா.? என்றால் வீட்டில் வணங்குவது நம்முடைய ஆத்ம திருப்திக்காக, கோவிலுக்கு போவது சக சாய் பக்தர்களை பார்த்து நாமும் மனம் மகிழ்வதற்காக. அங்கு போயிட்டு அங்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய விக்கிரகத்தை பார்க்கும்போது சாயப்பாவே அங்கு அமர்ந்து கொண்டிருக்க கூடிய ஒரு உணர்வை நம்மால் உணர முடியும். அதனால் வாரத்திற்கு ஒரு முறை பாபா கோவிலுக்கு போயிட்டு வாருங்கள் முடியாத பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய புகைப்படத்தையே நீங்கள் மனதார நினைத்து வேண்டினாலே போதுமானது.

3. புகைப்படம் என்கிட்ட இல்ல விக்ரகம் என்கிட்ட இல்ல நான் வெளியூருக்கு போறேன், ட்ராவல்ல இருக்க, நான் என்ன பண்ணட்டும். அப்படின்னா ஒன்னும் கிடையாது உங்க மனசுக்குள்ளேயே நீங்க சாய் அப்பா பெயரை சொல்லி அவரிடம் ஒரு பிரார்த்தனையை ஒரே ஒரு முப்பது செகண்ட் வைத்தால் கூட அதற்கான பலன் அதிகம். சாய் அப்பாவே சொல்லி இருக்கிறார் நீ என்னை அழைக்கும் போது என்னுடைய சமாதியில் இருந்து நான் உனக்கு பதில் சொல்வேன் அந்த வகையில் அவர் நமக்கு பதில் அளிப்பார்.

4. வீட்டில் இருக்கக்கூடிய ஒருவர் சாய் பக்தர் மற்றவர்கள் அனைவரும் அன்று மாமிசத்தை உண்கிறார்கள் என்றால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் மாமிசத்தை உண்பதற்கு முன் சாயப்பாவை மனதார வேண்டி விட்டு பூஜைகள் செய்த பிறகு நீங்கள் மாமிசத்தை உண்ணலாம் அல்லது நான் உண்ணும் பழக்கம் இல்லை என்றால் நீங்க சாப்பிடத் தேவையில்லை. குடும்பத்தில் இருக்கக்கூடியவர்கள் சாப்பிட்டால் சாப்பிடட்டும் அதில் எந்தவித தவறும் இல்லை, அதனால் சாய் அப்பா கோபித்துக் கொள்ள மாட்டார் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

இந்த நான்கு முறைகளைதான் நாம் இங்கு எளிதாக பார்க்கிறோம். இதைப் பற்றி நிறைய பதிவுகள் அடுத்தடுத்து நாம் பார்ப்போம் நம் பக்கத்தோடு நீங்கள் இணைந்திருங்கள். சாய் அப்பா என்பவர் நம்மில் ஒருவர், நமக்கான ஒருவர், அதனால் அவருக்கென்று வழிமுறை அல்ல மனதார அவரிடம் கேட்கும்போது அத்தனையும் செய்யக்கூடிய வல்லமை கொண்ட மகான்.

ஓம் சாய் ராம்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top