சந்திரன் பகவான் இருக்கும் இடம் எப்படி இருக்கும்.?

சந்திரன் பகவான் இருக்கும் இடம் எப்படி இருக்கும்.?
தகப்பனார்: இப்போது சந்திரனைப் பற்றி கூறுகிறேன். பொதுவாக சந்திரன் அழகன் ; கீர்த்தியுள்ளவன் : புத்திசாலி ; மனையாளுக்கு இனியவன் ; இவர் லக்னத்திலேயே இருந்தால் சந்திரனுடைய பூரண குணங்கள் ஜாதகரைச் சாரும். லகனத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர் ஆண் அழகர். மனையாளுக்கு இனியவர். சந்திரன் குளிர்ச்சி பொருந்தியவனாகையால் எப்போதும் இவருக்கு ஜலதோஷத்தால் உபாதை இருந்து கொண்டேயிருக்கும்.

சந்திரன் இரண்டாவது இடத்தில் இருக்கப்பிறந்தவர் கீர்த்தியுள்ளவராகவும், புத்தி சாதுர்யம் உள்ளவராகவும் இருப்பார்.
தனவந்தராகவும், ஸ்திரீபோகம் அதிகம் உள்ளவராகவும்,
மூன்றாவது இடத்தில் சந்திரன் இருக்கப்பிறந்தவர்கள் கல்வி கேள்விகளில் தேர்ச்சிப் பெற்றவராயிருப்பார். ஆனால் சபைக் கூச்சம் இவருக்கு அதிகம் இருக்கும். சபை முன் கோழையாகவே இருப்பார். மூலரோக உபாதை சௌக்கியமுடையவர் என்றும் கூறலாம். இருக்கும். ஆனால்.
சந்திரன் நான்காவது இடத்தில் இருக்கப்பிறந்தவர் விசாலமான வீடு உடையவராக இருப்பார். பலருக்கு ஆதரவு கொடுத்துக் காப்பாற்றும் நல்ல குணம் உடையவர். பரிமள வாசனை திரவியங்களை அதிகமாக உபயோகிப்பவர். பல இனிய குணங்களைக் கொண்டவர்.

சந்திரன் ஐந்தாவது இடத்தில் இருக்கப்பிறந்தவர், அழகான மனைவியையுடையவர். மாந்திரீகத்தில் ஈடுபாடு உள்ளவர். தற்பெருமை அதிகம் உடையவர். நல்ல வார்த்தைகளை இனிக்க இனிக்கப் பேசக் கூடியவர். எல்லோரும் விரும்பக் கூடியவர். செய்தொழில் லாபம் காண்பவர்.

ஆறாவது இடத்தில் சந்திரன் இருந்தாலோ மதுபான விஷயத்தில் ஆசையுள்ளவர். மனைவியர் ஒன்றுக்கும் அதிகமாக உண்டு. காம இச்சையுடையோர் என்றும் சொல்லலாம். ஞாபக சக்தி குறைந்தவர் என்றும் சொல்ல வேண்டும். தொழில் விருத்தியுள்ளவர்.
சந்திரன் ஏழாவது இடத்தில் இருக்கப்பிறந்தவர். மனைவி உயிரோடு இருக்கும் போதே வேறு பெண்ணை மணந்து கொள்வார். பிறமாதர் பேரில் இச்சையுடையவர். இந்த காரணத்தைக் கொண்டு களத்திர தோஷம் உண்டு என்று சொல்வார்கள். வாழ்க்கையில் சற்று தாறுமாறாக நடப்பதால் பெண்களே இவரை கேலி செய்யும் அவல நிலையை அடைவார்.
எட்டாவது இடத்தில் சந்திரன் இருக்கப் பிறந்தவர். ஆயுளின் பின் பாகத்தில் வசதிகள் நிறைந்து காணப்படுவார். அற்ப ஆயுள் என்றும் சொல்லலாம். பித்த சரீரமுள்ளவர். நல்ல குணங்கள்
உள்ளவர். பிறர் இவரை விரும்பும் நல்ல தன்மையுள்ளவர்.
ஒன்பதாவது இடத்தில் இருக்கப்பிறந்தவர் புத்திமான். பாக்கியவான். எந்த காரியத்தையும் நினைத்த போதே ஆரம்பித்து முடிக்க வேண்டுமென்னும் ஆர்வம் உள்ளவர். சுகசரீரம் உள்ளவர். புத்திர பாக்கியம் உண்டு. ஆனால் இருவருக்கும் அற்ப ஆயுள் பிரதானம் என்றே சொல்லலாம்.
சந்திரன் பத்தாவது இடத்தில் சந்திரன் இருக்கப்பிறந்தவர். எந்த காரியத்தைத் தொடங்கிய போதிலும் அதை முடித்துவிட்டு மறு வேலை பார்ப்பதென்னும் தீவிரமுள்ளவர். நல்ல குணங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top