குரு பகவானை எந்த நாட்களில் வணங்கினால் சிறப்பானது.! / தக்ஷிணாமூர்த்தியை எந்த நாட்களில் வணங்கினால் சிறப்பானது.!

குரு பகவானை எந்த நாட்களில் வணங்கினால் சிறப்பானது.! / தக்ஷிணாமூர்த்தியை எந்த நாட்களில் வணங்கினால் சிறப்பானது.!

ஒருவருடைய வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்க வேண்டும் ஞானம் கிடைக்க வேண்டும் செல்வம் கிடைக்க வேண்டும் பேர் புகழ் அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு குருவினுடைய பார்வை மிக முக்கியம் அந்த வகையில் குரு பகவானை நாம் எந்த நாட்களில் வணங்கினால் நமக்கு சிறப்பானது என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
எப்போதும் குரு பகவானை வளர்பிறை வியாழக்கிழமை வணங்குவது மிக சிறப்பானது.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு பகவானுக்கு உகந்த நாள் அதில் குறிப்பாக மாதத்தில் ஒருமுறை வரக்கூடிய வளர்பிறை வியாழக்கிழமை அன்று நீங்கள் குரு பகவானை வணங்கினால் உங்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய அதி தேவதையில் மிக முக்கியமானவர் குருபகவான் அதனால் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக குரு பகவானை வணங்க வேண்டும்.
திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கக்கூடியவர்கள் கண்டிப்பாக ஆலங்குடியில் இருக்கக்கூடிய குரு பகவானை வணங்க வேண்டும் ஒரு முறையாவது கோவிலுக்கு சென்று 25 முறை அந்த கோவிலை சுற்றி வர வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top