உங்கள் வீட்டில் பணப்பெட்டி எங்கு வைத்தால் லட்சுமி வாசம் செய்வாள்.!! பணப்பெட்டி எங்கு வைத்தால் பணம் அதிகமாக சேரும்.?

எந்த இடத்தில் உங்களுடைய பணப்பெட்டியான பீரோ அல்லது பணப்பெட்டி இந்த இரண்டையும் எந்த இடத்தில் வைத்தால் பணம் அதிகமாக சேரும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்.

How to increase money tips

பணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான விஷயமாக இன்றைய காலகட்டத்தில் பார்க்கப்படுகிறது. இன்னும் தெளிவாக சொன்னால் பணம் இருந்தால் மட்டுமே மதிப்பும் மரியாதையும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கின்றன இல்லையென்றால் சொந்தக்காரர்கள் கூட இன்றைய காலகட்டத்தில் மதிப்பது கிடையாது.

நாம் எவ்வளவுதான் உழைத்தாலும் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தாலும் நம் வீட்டில் பணம் தங்குவதில்லை அதற்கு காரணம் நம்முடைய பணப்பெட்டி நாம் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்பது மிக மிக முக்கியமான ஒரு விஷயம். அந்த வகையில் இன்று நாம் பணத்தை சேமித்து வைக்கக்கூடிய பணப்பெட்டி எந்த இடத்தில் வைத்தால் நமக்கு செல்வம் பெருகும் என்பதை பற்றி அடுத்தடுத்து தெரிந்து கொள்ள போகின்றோம், வாருங்கள் பார்ப்போம்.

ஒவ்வொருவருடைய வீடையும் எடுத்துக் கொண்டால் நான்காக பிரிக்கப்படுகிறது. ஒன்று வாய்வு மூலை, இரண்டு அக்னி மூலை, 3 ஈசானிய மூலை, நான்கு குபேர மூளை, இந்த நான்கு மூலைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு வீடு கட்டப்படுகிறது. இந்த நான்கு மூலைகளில் எந்த மூலையில் பணப்பெட்டி வைத்தால் சிறப்பாக இருக்கும்.. இதை படிக்கும் போது உங்களுக்கே நன்றாக தெரிந்திருக்கும் ஆம் குபேர மூலையில் உங்களுடைய பண பெட்டி வைத்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில் குபேரன் வாசம் கிடைக்கும், அதனால் நீங்கள் சம்பாதிக்க கூடிய பணம் உங்கள் வீட்டில் தங்கும்.

இப்போது புதிதாக கட்டக்கூடிய பெரும்பாலான வீடுகளில் வாஸ்து பிரகாரம் கட்டுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே அங்கங்க பணப்பெட்டிகள் வைக்கப்படுகிறது இருந்தாலும் நம் வீட்டில் குபேர மூலையில் பணப்பெட்டி இருக்கிறதா என்பதை பற்றி நாம் கொஞ்சம் தெளிவாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல உங்களுடைய பணப்பெட்டியில் இருந்து நீங்கள் பணத்தை வைக்கும் போது முழுமையாக வைக்க வேண்டும். அதாவது நீங்கள் சம்பாதித்த வருமானம் இன்று உங்களுக்கு கிடைக்கிறது என்றால் அந்த முழு பணத்தையும் செலவு செய்து விடக்கூடாது, உங்கள் கைக்கு வந்த உடன் அதை எடுத்துக்கொண்டு பீரோவில் அல்லது பணப்பெட்டி வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். அடுத்த நாள் அந்த பணத்தை எடுக்கும் போது முழுமையாக எடுத்து விடக்கூடாது அந்த பணப்பெட்டியில் சிறிது பணத்தை அங்கு வைக்க வேண்டும் அது லட்சுமி வாசம் செய்யும் இடம் அதனால் இந்த பழக்கத்தை நீங்கள் கொண்டு வர வேண்டும்.

நிச்சயமாக உங்களுக்கு பணம் அதிகமாக கிடைக்கும். நீங்கள் குபேர மூலையில் பணப்பெட்டி வைத்தால் அது மட்டும் போதாது வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் உங்களுடைய வீடுகளில் பூஜை செய்யும்போது, அந்த பணப்பெட்டிக்கும் சாம்பிராணி வாசத்தை காட்ட வேண்டும் நிச்சயமாக தெய்வ அருள் அங்கு கிடைத்து. ஒவ்வொருவரினுடைய வாழ்க்கையிலும் பணம் நிரந்தரமாக தங்குவதற்கான வழிகளை லட்சுமிதேவி உங்களுக்கு செய்து வைப்பார் மறக்காமல் இதை செய்து பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு நல்லது நடக்கும்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top