உகாதி பண்டிகை (தெலுங்கு வருட புத்தாண்டு ) அன்று என்ன செய்ய வேண்டும்

உகாதி பண்டிகை (தெலுங்கு வருட புத்தாண்டு ) அன்று என்ன செய்ய வேண்டும் :-

உகாதி பண்டிகை என்று சொல்லக்கூடிய தெலுங்கு வருட புத்தாண்டு அன்று நாம் என்ன செய்தால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் எந்த கடவுளை வணங்கினால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.

மார்ச் 22 புதன்கிழமை தெலுங்கு வருட பிறப்பு வருகிறது இந்த நாள் அன்று இந்த கடவுளை வணங்கினால் கண்டிப்பாக உங்களுக்கு நல்லவிதமான பலன்கள் கிடைக்கும் அது மட்டும் அல்லாமல் இந்த நாள் நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் உங்களுக்கு அதில் வெற்றி நிச்சயம்.
தெலுங்கு வருட பிறப்பன்று என்ன செய்தால் நமக்கு பலன் :-
  1. தெலுங்கு வருட பிறப்பன்று காலையில் எழுந்தவுடன் உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிவித்து பெருமாளிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் பிறகு அந்தக் கோவிலில் ஒரு அரை மணி நேரம் அமர்ந்து தியானம் செய்து பெருமாளிடம் மனதிற்குள் பேச வேண்டும்.
  2. பணக்கார கடவுள் என்று சொல்லக்கூடிய பெருமாளுக்கு பிடித்த துளசி மாலை அணிவிக்கும் போது அதனுடைய பலன் பேர் புகழ் செல்வாக்கு அணிவிக்கும் ஒருவருக்கு கிடைக்கும் அதுவும் தெலுங்கு வருடப்பிறப்பு பெருமாளுக்கு சிறப்பான நாள்.
  3. இந்த தெலுங்கு வருட பிறப்பன்று கண்டிப்பாக ஒவ்வொருவரும் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று எண்ணம் இருந்தால் இந்த தெலுங்கு வருட பிறப்பன்று செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
  4. புதன்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு வருவதால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் உங்களுடைய குலதெய்வத்தை வணங்க வேண்டும்.
  5. உங்கள் கையால் மூன்று பேருக்கு நீங்கள் உணவு தானம் செய்ய வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட அந்த நான்கு விஷயங்களை நீங்கள் தெலுங்கு வருடப்பிறப்பு என்று செய்தால் கண்டிப்பாக சகல ஐஸ்வர்யங்களும் உங்கள் வீட்டில் வந்து குடியேறும் உங்களுடைய வளர்ச்சி நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top