தினப் பொருத்தம் / Thina porutham

தினப் பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும் போது. மிருத்தியுமென்றும். பிரீதியென்றும். விபத்தென்றும் சுகமென்றும், பீடையென்றும், பசுலாமென்றும், ரோகமென்றும், சந்தானமென்றும், சாத்ரவப் ப்ராப்தியென்றும் இப்படியே 10-வது நட்சத்திரம் முதல் பிரதி 9 நட்சத்திரங்களுக்குப் பலன் கூற வேண்டியுள்ளது. இப்படி எண்ணும்போது 2, 4, 6, 8,9 என்ற நட்சத்திரங்கள் உத்தமம். ஒவ்வொரு நட்சத்திரங்களும் 4 பாகமாகப் பிரிக்கப்பட்டிருப்பது தெரியும் அப்படி பிரிக்கப்பட்டதில் 12 நட்சத்திரத்தில், 2, 3, 4 பாகமும் 14வது நட்சத்திரத்தில் 1, 2, 3 பாகமும், 22வது நட்சத்திரத்தில் 1,2, 3. பாகமும் வரின் பொருத்தமுண்டு. 27வது நட்சத்திரத்திற்கு மட்டும் ஒரு தனியான நிபந்தனையுண்டு. இந்த 27வது பொருத்தமுண்டு.

நட்சத்திரத்தாலும், அசுவினி -ரேவதி என்பவைகள் பெண் நட்சத்திரமாகவும், புருஷநட்சத்திரமாகவும், அமைந்தால்

(1) பரணி,திருவாதிரை, புனர்பூசம், பூசம், பூரம், மூலம், உத்திரம், உத்திராடம் இவைகள் பெண் நட்சத்திரமானால் 7 வது தாரையில் தோஷமில்லை.

(2) ரோகிணி,பூரட்டாதி, புனர்பூசம், அசுவனி, மகம், உத்தி, திருவாதிரை. அஸ்தம், சித்திரை, பூரம், உத்திராடம், சுவாதி, பூரட்டாதி, மூலம், ரேவதி இந்த நட்சத்திரங்களுக்கும் தோஷமில்லை.

(3) பூசம், பரணி, அனுஷம், பூரம், உத்திரட்டாதி, பூராடம் இவைக ளுக்கும் தோஷமில்லையென்றாலும் ரஜ்ஜு தட்டுகின்றது. இந்த ரஜ்ஜு (1) ஆரோகணமாகவும், (2) அவரோக ணமாகவும் இருக்கின்றபடியால், தோஷமில்லை என்று கூறலாமாயினும் இரண்டு சந்தர்ப்பங்களிலும் விசேஷ விதியை அனுசரிக்க வேண்டியிருப்பதால் இந்த மூன்று ஜோடி நட்சத்திரங்களையும் தள்ளிவிடலாம். ஜாதகத்தில் மற்ற அம்சங்கள் பலமாயிருக்குமானால் இந்த மூன்று ஜோடிகளையும் எடுத்துக் கொள்ளலாம். ஆகவே கவனிக்க பலாபலன்களுக்கு அனுசரித்து இவற்றை வேண்டும்.

(4) உத்திரம், திருவாதிரை, உத்திராடம், அனுஷம், சித்திரை பூரம், புனர்பூசம், அஸ்தம் இந்த ஜோடிகளும் நல்லது எடுத்துக் கொள்ளலாம்.

(5) கார்த்திகை, ஆயில்யம், சுவாதி, சித்திரை, பூராடம்,அனுஷம், அவிட்டம், பரணி, சதயம், கார்த்திகை, இந்த ஜோடிகள் சேர்க்கத்தகாதவை.

(6) கேட்டை, சதயம், உத்திரம், மிருகசீரிடம், அஸ்தம், மூலம், இவைகளும் சேர்க்கக்கூடாத ஜோடிகள் மற்றும் ரேவதி. திருவாதிரை, கேட்டை, உத்திரம், விசாகம், மகம், அஸ்தம், திருவோணம் இவைகளும் சேர்க்கத்தகாதவைகள்.

ரோகினி. திருவாதிரை, மகம், விசாகம், பூரம், ரேவதி இந்த உத்திரட்டாதி இந்த நட்சத்திரங்களில் ஏதாவது இருவருக்கும் ஏகநட்சத்திரமானால் உத்தமமாகும். ஒன்று

அசுவினி, கார்த்திகை, மிருகசீரிடம், பூரம், உத்திரம், புனர்பூசம், பூராடம், உத்திராடம், அனுஷம், கேட்டை, அஸ்தம் இவைகளில் ஏதேனும் ஒன்று இருவருக்கும் ஏகநட்சத்திரமாக அமையும் போதும் அடியிற் கண்டவைகளை முக்கியமாகக் கவனிக்க வேண்டியது. நட்சத்திரமாக அமைந்து ஏக 2 ராசிகளாகும்போது புருஷனுடைய முந்தியும்; பெண்ணுடையது பிந்தியுமாக அமையும்போது நல்லது. உதாரணமாக விசாகம் இருவருக்கும் ; புருஷனுக்கு துலாராசியும், பெண்ணுக்கு விருச்சிகமாகவும் இருந்தால் உத்தமம். (மாறி இருந்தால் உசிதமில்லை) ஏக நட்சத்திரம் ஏக ராசியானால் ஆணுடையது முந்தியதும், பெண்ணுடையது பிந்தியுமாக அமைய வேண்டும். உதாரணமாக விசாகமே நட்சத்திரமாய் துலாராசியே அமைந்து இருப்பதாக வைத்துக் கொள்வோம். புருஷனது 1-ம் பாதமாகவும், பெண்ணினுடையது 2-ம் பாதமாகவும் அமையவேண்டும். இவற்றிலும் ஒரே ராசியாக அமையும் பரணி-கிருத்திகை. அவிட்டம் – சதயம், பூசம்-ஆயில்யம் என்ற ஜோடிகள் கூடாத தாகும். ஒரே ராசியாக ஸ்திரீ-புருஷர்களின் நட்சத்திரங்கள் அமைந்து இருக்கும் போதும், சதயம், அஸ்தம், சுவாதி, அஸ்விணி, கார்த்திகை, பூராடம், மிருகசீரிடம், மகம்-இவைகள் பெண் நட்சத்திரமாகவும் அமையுமானால் சுபமாகும். மற்றும் ஏக நட்சத்திரமாக அமையுங்கால், 3-ம் பாதமுள்ளவை : ஆண் நட்சத்திரமாகவும், பாதம் ஏக பெண் நட்சத்திரமாகவும் அமையவேண்டும். இப்படி அமைந்தால் சுபம், பாதங்கள் சமமானால் முன்பாதம் ஆணுடையதாகவும், பின்பாதம் பெண்ணுடையதாகவும் அமையுமானால் நல்லது.

குறிப்பு

முக்கியமானது ஆண் – பெண்களிருவரும்

தினப்பொருத்தம் பார்ப்பதில் வேறு அம்சங்களையும் நன்கு கவனித்துக் கூற வேண்டியது. இந்த தினம் பொருத்தத்தில் வாழ்க்கை ‘நடத்துவதில்’ மனமொற்றுமையாக ஒரே நோக்காக உலக விவகாரங்களையும், வாழ்க்கை வசதிகளையும் நடத்தும் மனவொற்றுமைகள் இருக்கிறதா என்பதை கவனிக்க உதவும் என்பதே ; இந்த தினப் பொருத்தம் பிராமணர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top