இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று என்று பாடிய பாடலுக்கு நிகராக ஒவ்வொருவரின் திருமண காலத்திற்குப் பிறகு திருமண வாழ்க்கையில் சில நிகழ்வுகள் மிக முக்கியமான நிகழ்வுகளாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருமணத்திற்கு பிறகு அடுத்த சங்கதிகளை வளர்ப்பதற்கான நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலை ஒவ்வொரு ஆண் மகன்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் கட்டாயம் இருக்கிறது அந்த வகையில். திருமண வாழ்க்கை இனிமையாக அமைவதற்கு நம் முன்னோர்கள் சொன்ன மிக மகத்துவமான இயற்கை வைத்தியத்தை பற்றி தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.
நாம் சிறு வயதில் செய்த சில தவறுகளால் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய பலம் குறைந்து கொண்டே வந்திருக்கலாம் இதனால் நரம்பு தளர்ச்சி இன்னும் சொல்ல முடியாத சில பாதிப்புகள் கூட ஏற்பட்டு இருக்கலாம் இதிலிருந்து குணமடைந்து திருமண வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து இன்பங்களை அனுபவிக்க மிக முக்கியமான ஓர் இதழைப்பற்றி பார்க்கப் போகின்றோம் அது ஓர் இதழ் தாமரை.
இந்த ஓரிதழ் தாமரை நீங்கள் நாட்டு மருத்துவ கடைகளில் விற்கப்படுகிறது அந்த ஓரிதழ் தாமரை ஒரு இதழ் செடி அதில் இருக்கக்கூடிய வேர் மொத்தமாக நீங்கள் வாங்கிக் கொண்டு வந்து உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
பிறகு தினமும் காலையில் பாலுடன் அந்த ஓரிதழ் தாமரை பவுடரை கலந்து குடித்து வந்தால் உங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத சிறுவயதில் செய்த அத்தனை பிழைகளும் திருத்தப்பட்டு இல்லற வாழ்க்கையில் சுகங்களை அனுபவிக்க முடியும் குறிப்பாக நீண்ட நேரம் இன்பங்களை காண்பதற்கு இது உறுதுணையாக இருக்கிறது.